விவகாரத்து வழக்கில் இயக்குனர் செல்வராகவன், அவரது மனைவி சோனியா அகர்வால் ஆகியோர் இன்று கோர்ட்டில் நேரில் ஆஜரானார்கள்.
செல்வராகவன் இயக்கிய “காதல் கொண்டேன்” படத்தில் நடிகை சோனியா அகர்வால் கதாநாயகியாக நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணமான சில மாதங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் இருவரும் விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். இருவரும் சம்மதித்து பிரிவதாக மனுவில் கூறியிருந்தனர்.
இந்த வழக்கு இன்று குடும்ப நல நீதிபதி ராமலிங்கம் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது இயக்குனர் செல்வராகவனும், நடிகை சோனியா அகர்வாலும் கோர்ட்டில் ஆஜரானார்கள்.
இந்த வழக்கில் வருகிற 12-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி ராமலிங்கம் கூறினார்
More News
Feature News
|
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ |
|
ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிக அளவு கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம |
|
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள் |
|
முத்தையாவும் முகம்மது அலியும்
விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī |
|
மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!
மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. "நரம்பு |








